தமிழ் மொழி இனிமையானது என்பதில் இரண்டாம் கருத்து யாருக்கும் இருக்க முடியாது. ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப தமிழின் உச்சரிப்பு மறுபடுகிறது. கொங்கு தமிழ், மதுரை தமிழ், சென்னை தமிழ், நெல்லை தமிழ் என கூறலாம். இவ்வள்வு தமிழ் இருக்க பண்டைய புலவர்கள் ஏன் சங்கத்தமிழில் மட்டும் பா இயற்ற வேண்டும்? அப்படியானால் புலவர்கள் இருந்த காலத்தில் மற்ற வகையான தமிழை அங்கீகரிக்கவில்லையோ? அல்லது புலவர்கள் மறைந்த பிறகு இவ்வகையான தமிழ் பிறந்திருக்குமோ?
ஒரு நகைச்சுவைக்காக யோசித்த்து பார்த்தேன். திருவள்ளுவர் சென்னையில் உள்ள மைலாப்பூரில் பிறந்ததாக தழிழ் பாட நூலில் படித்துள்ளேன். இவர் திருக்குறளை சென்னை தமிழில் எழுதியிருந்தால்? அதே போல் கம்பன் திருச்சி வட்டார தமிழிலும், அகத்தியர் மதுரைத்தமிழிலும், இளங்கோவடிகள் நெல்லைத்தமிழிலும் எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்க்ம்?
யோசித்து பார்க்கவே முடியவில்லை, தமிழ் பாட வகுப்பு... நல்ல நகைச்சுவை பாட வகுப்பாக மாறியிருக்கும்.
No comments:
Post a Comment